Monday, August 18, 2008

பிரிவில் தான்
காதலின் ஆழம் தெரியுமாம்
அடி போடி!
எனக்கு ஆழம் தெரிய வேண்டாம்
தினம் உன் முகம் தெரிந்தால் போதும்.

நீ சுவாசிக்கும்
மூச்சு
காற்றில் கலந்து
எனை தீண்டாதா?
எனும் ஏக்கதுடன்
வாழ்கிறேன்.
ஆக்சிஜன்
இல்லாமல்
உன்னையே சுவாசித்துக்கொண்டு.
காதலில்
கண்ணுக்கு வேலையில்லை
கல்யாணத்திற்குபின்
கனவுக்கு நேரமில்லை
கண் விழித்த பிறகு
தப்பிக்க வழியில்லை