Wednesday, December 31, 2008

உன்னை
கண்டால்
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.

ஏனென்றால்,
உன்
முன்
நின்றுதான்

சிரிக்கிறாள்....

கண் சிமிட்டுகிறாள்.......

உதடுகளை
சுருக்கி
காற்றுக்கு
முத்தம்
கொடுக்கிறாள்........

தன்னை
இவ்வுலகின்
இளவரசி என
எண்ணிக்கொண்டு
தன்
கயல்விழிகளால்
காதல்
மொழி பேசுகிறாள்................

அவளின்
பின்
அழகினை
உன்முன்
காட்டி
புன்முறுவல்
பூக்கிறாள்.........

நீ
ஏன்
அவளிடம்
காதல்
கொள்ளவில்லை..

நான்
வந்தால்
என்னிடமே
என்னை காட்டிக்கொடுக்கிறாய்.
விழுதுகள்
வீழ்ந்ததால்
விழாமல்
இருக்கிறது
ஆலமரம்.

தினம்

தினம்
ஒரு
திங்கள்
அவள்
கல்லூரி வராமல்
இருக்கும்
ஒவ்வொரு நாளும்............................

ஊனம்

தவறு
செய்தால் தான்
தண்டிக்கபடுவார் என்றால்
நாங்கள்
தண்டிக்கப்பட்டிருக்கிறோம்....?

Monday, December 22, 2008

மண் மேடு

வென்றவனுக்கு
சரித்திரமும்
தலையணை தரும்..

சாய்ந்தவனுக்கு
மண் மேடும்
மலை முகடு....

முயற்ச்சிதவனுக்கு
ஆழியும்
கடந்துவிடும் தூரமமே....

நீல வானமும்
தொட்டுவிடும்
உயரமே.....

சுட்டெரிக்கும்
சூரியனும்
தொட்டுவிடும்
பனிக்கட்டியே.........


கலங்கச்செய்யும்
கவலைகளை
களையச் செய்து
தோல்வியின்
துணைக்கொண்டு
துணிந்துவிடுத்
தோழா
இனி
உலகம்
உன்
காலடியில்.....

Friday, December 5, 2008

விட்டில் பூச்சி நான்

முகில் மூடிய
மதியின்
முகம் காண
முயல்கிறேன்........
நீ
வெட்கப்பட்டு
கைகளால்
மூடிகொண்ட
உன்
முகத்தை
விரல்களால்
விலக்கி
உன்
நாணம்
காண துடிக்கிறேன்......
எனை
ஏமாற்றாதே
விளக்கொளி
தேடி
ஓடி வரும்
விட்டீல்
பூச்சி நான்.

Monday, August 18, 2008

பிரிவில் தான்
காதலின் ஆழம் தெரியுமாம்
அடி போடி!
எனக்கு ஆழம் தெரிய வேண்டாம்
தினம் உன் முகம் தெரிந்தால் போதும்.

நீ சுவாசிக்கும்
மூச்சு
காற்றில் கலந்து
எனை தீண்டாதா?
எனும் ஏக்கதுடன்
வாழ்கிறேன்.
ஆக்சிஜன்
இல்லாமல்
உன்னையே சுவாசித்துக்கொண்டு.
காதலில்
கண்ணுக்கு வேலையில்லை
கல்யாணத்திற்குபின்
கனவுக்கு நேரமில்லை
கண் விழித்த பிறகு
தப்பிக்க வழியில்லை

Wednesday, June 25, 2008

விதைகளை
மருகச்செய்யும்
மணலாகாதே!!

மழைநீர் பட்டவுடன்
பொங்கி எழும்
கரிசல் மண்ணாகவும்
வேண்டாம்!!.......தன்னை
விரும்பியவனை மட்டும்
வாழைவைக்கும்
வண்டல் மண்ணாகவும்
வேண்டாம்!!

எடுப்பார் கைப்பிள்ளையாகும்
களி மண்ணாகவும்
வேண்டாம்!!...

கிடைத்ததைக் கொண்டு
செழிப்புர வளரச்செய்யும்
செம்மண்ணாகவே
நீ
இருந்துவிடு......

Tuesday, June 24, 2008

பெயர்

பேனா எடுத்து
உட்கார்ந்தேன்!
உனக்கு ஒரு
கவிதை வரைய!!
வார்த்தைகள்
வர மறுக்கின்றது!!!
என் நினைவில்.......ஏனேன்றால்

என்
எண்ணமெல்லாம்
உன் முகத்தில்தானடி
இருக்கின்றது!
இதனால்
உன் முகம் மறக்க முயன்றேன்
மு7டிந்தது!!
கவிதை எழுதுவதும்!!!

எப்படி என்றால்
உன் முகம்
மறைந்த பிறகு
வார்த்தைகளையும்
மறந்ந்துவிட்டேன்.........இதனால்தான்

உனக்கு
கொடுத்த கடிதத்தில்
உன் பெயரை மட்டும்
எழுதினேன்!
அதுவும் ஒரு கவிதையனது!!...........இது

பொய் என்றால்
மற்ற எல்லா காதலர்களையும்
கேடுப்பார் .............. தங்கள்
கதலியின் பெயரும்!!
ஒரு
படிக்க இயலா கவிதை
என்பார்கள்........................