Wednesday, June 25, 2008

விதைகளை
மருகச்செய்யும்
மணலாகாதே!!

மழைநீர் பட்டவுடன்
பொங்கி எழும்
கரிசல் மண்ணாகவும்
வேண்டாம்!!.......தன்னை
விரும்பியவனை மட்டும்
வாழைவைக்கும்
வண்டல் மண்ணாகவும்
வேண்டாம்!!

எடுப்பார் கைப்பிள்ளையாகும்
களி மண்ணாகவும்
வேண்டாம்!!...

கிடைத்ததைக் கொண்டு
செழிப்புர வளரச்செய்யும்
செம்மண்ணாகவே
நீ
இருந்துவிடு......

Tuesday, June 24, 2008

பெயர்

பேனா எடுத்து
உட்கார்ந்தேன்!
உனக்கு ஒரு
கவிதை வரைய!!
வார்த்தைகள்
வர மறுக்கின்றது!!!
என் நினைவில்.......ஏனேன்றால்

என்
எண்ணமெல்லாம்
உன் முகத்தில்தானடி
இருக்கின்றது!
இதனால்
உன் முகம் மறக்க முயன்றேன்
மு7டிந்தது!!
கவிதை எழுதுவதும்!!!

எப்படி என்றால்
உன் முகம்
மறைந்த பிறகு
வார்த்தைகளையும்
மறந்ந்துவிட்டேன்.........இதனால்தான்

உனக்கு
கொடுத்த கடிதத்தில்
உன் பெயரை மட்டும்
எழுதினேன்!
அதுவும் ஒரு கவிதையனது!!...........இது

பொய் என்றால்
மற்ற எல்லா காதலர்களையும்
கேடுப்பார் .............. தங்கள்
கதலியின் பெயரும்!!
ஒரு
படிக்க இயலா கவிதை
என்பார்கள்........................

நதி

கார் மேகங்களின் கண்ணீரில்
கருத்தரித்தவள்.
மலைதான் அவள் பிறப்பிடம்.
மண்தான் அவள் இருப்பிடம்.
கடல்தான் இவள் மருப்பிடம்...

இவனும் ஒரு மறவன் தான்

சாதிக்கப் பிறந்தவனுக்கு
சாஸ்திரமும் வெற்றுத் தந்திரம்தான்
முயற்சியே அவன் மந்திரம்தான்.

வலிகளை வழியாக்கி
வெற்றி கனியை
விழுங்க நினைக்கும்
அவன் அல்லவோ - என்
தங்க தமிழ் பூமியில்
சரித்திரம் படைக்கப் பிறந்தத்
தவப்புதழ்வன்.

வேண்டியது விளையாது என
நினைத்து
வினைச் செய்ய மறந்தவன்
வாகைச் சூட மறந்தவன் தான்.

வேண்டியது வேண்டியபடி
விளைவிப்பேன் - என
வீர்கொண்டு
வினைச் செய்யும் முடவனும்
ஒரு மறவன் தான்..

Monday, June 23, 2008

காதல்

உன்னை
கேள்விகேட்டேன்
பதில் இல்லை.


என்னை
நீ
கேட்டாய்....

பதிலாய்
உன்னைபார்த்தேன்,
விழீகளில்
வலிததும்ப..

என்னை
பார்க்கிறீர்கள்
என்றாய்? - இல்லை

இருவர்
உள்ளங்களிலும்
துளிர்விட்ட பிறகும்!

கண்கள்
காட்டி கொடுத்தப்பின்பும்!

உண்ர்வுகள்
துடிக்கின்ற பொழுதும்!

உன்
செவிகள்
உன்னின்
உள்ளக்குமரல்களை
கேட்கின்ற் போதும்!

ஏனடி
உன்
உதடுகள்
உளர
மறுக்கின்றது.

இதோ!

நான் கூறுகின்றேன்..

கவிஞன்
அந்திவனத்தின் மீது கொண்டது.

கலைஞன்
கலை மீது கொண்டது.

சிற்பி
சிலை மீது கொண்டது.

மழை
மண் மீது கொண்டது.

உடல்
உயிர் மீது கொண்டது.

வண்டு
மலரிடம் கண்டது.

அடி பேதையே
இன்னுமா புரியவில்லை உனக்கு? - இல்லை

எல்லாம்
அறிந்தும் - அந்த
சிவபெருமான் போல் - என்னை
தருமியாக்கி சோதிக்கிறாய?
என் நண்பன் சொன்னான்

உன்னை பார்த்ததும்

கவிதை எழுத தோன்றுகிறது

என்றான்...

ஆனால் எனக்கோ - உன்னை

பார்த்துக்கொண்டிருக்க தோன்றியது.

உந்தன் வளைவுகள் கண்டு

எந்தன் உணர்வுகள் துளிர்கின்றது.

உந்தன் வண்ணம் கண்டு

எந்தன் எண்ணம் செழிக்கின்றது.

நீ

என் அருகில் வரும்பொழுது

எங்கே என்மேல் விழுவாயோ

என நினைத்து

என் கண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்

நீயோ

என்னை உரசிச் சென்றாய்.

என் மனம்

உன்னைக்கண்டு தவிக்க


நீயோ மணம் தேடிச் சென்றாய்.

அட வண்ணத்துப்பூச்சியே!

நீ

ஏன் இவ்வளவு

அழகாக இருக்கிறாய்!

என் காதலியைவிட......


Sunday, June 22, 2008

விண் நிலா

கார்மேகங்களே
கரைந்து செல்லுங்கள்..
வான்மதி அவள்
எனை காண வருகிறாள்.

Saturday, June 21, 2008

நினைவுகள்

வானவில் ஏழு வண்ணங்களில்...
என் நினைவுகள்
உன் எண்ணங்களில்...

அடியே
விதவைப் பெண்ணே...
நீ ஏன்
அணிய மறுக்கிறாய்
இந்த வண்ண உடைகளை.

நீ உன்
வெற்றுச் சிந்தனைகளை
உதரிவிடு..
நான்
இடுகிறேன்
வெற்றி திலகத்தை.

உன் மறுக்கும் மனதை
மாற்றிக்கொள்...
நாம் இணைந்திடுவோம்
உன் மறுமணத்தில்!