Monday, June 23, 2008

என் நண்பன் சொன்னான்

உன்னை பார்த்ததும்

கவிதை எழுத தோன்றுகிறது

என்றான்...

ஆனால் எனக்கோ - உன்னை

பார்த்துக்கொண்டிருக்க தோன்றியது.

உந்தன் வளைவுகள் கண்டு

எந்தன் உணர்வுகள் துளிர்கின்றது.

உந்தன் வண்ணம் கண்டு

எந்தன் எண்ணம் செழிக்கின்றது.

நீ

என் அருகில் வரும்பொழுது

எங்கே என்மேல் விழுவாயோ

என நினைத்து

என் கண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்

நீயோ

என்னை உரசிச் சென்றாய்.

என் மனம்

உன்னைக்கண்டு தவிக்க


நீயோ மணம் தேடிச் சென்றாய்.

அட வண்ணத்துப்பூச்சியே!

நீ

ஏன் இவ்வளவு

அழகாக இருக்கிறாய்!

என் காதலியைவிட......


No comments: