Wednesday, June 25, 2008

விதைகளை
மருகச்செய்யும்
மணலாகாதே!!

மழைநீர் பட்டவுடன்
பொங்கி எழும்
கரிசல் மண்ணாகவும்
வேண்டாம்!!.......தன்னை
விரும்பியவனை மட்டும்
வாழைவைக்கும்
வண்டல் மண்ணாகவும்
வேண்டாம்!!

எடுப்பார் கைப்பிள்ளையாகும்
களி மண்ணாகவும்
வேண்டாம்!!...

கிடைத்ததைக் கொண்டு
செழிப்புர வளரச்செய்யும்
செம்மண்ணாகவே
நீ
இருந்துவிடு......

No comments: