Wednesday, December 31, 2008

உன்னை
கண்டால்
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.

ஏனென்றால்,
உன்
முன்
நின்றுதான்

சிரிக்கிறாள்....

கண் சிமிட்டுகிறாள்.......

உதடுகளை
சுருக்கி
காற்றுக்கு
முத்தம்
கொடுக்கிறாள்........

தன்னை
இவ்வுலகின்
இளவரசி என
எண்ணிக்கொண்டு
தன்
கயல்விழிகளால்
காதல்
மொழி பேசுகிறாள்................

அவளின்
பின்
அழகினை
உன்முன்
காட்டி
புன்முறுவல்
பூக்கிறாள்.........

நீ
ஏன்
அவளிடம்
காதல்
கொள்ளவில்லை..

நான்
வந்தால்
என்னிடமே
என்னை காட்டிக்கொடுக்கிறாய்.
விழுதுகள்
வீழ்ந்ததால்
விழாமல்
இருக்கிறது
ஆலமரம்.

தினம்

தினம்
ஒரு
திங்கள்
அவள்
கல்லூரி வராமல்
இருக்கும்
ஒவ்வொரு நாளும்............................

ஊனம்

தவறு
செய்தால் தான்
தண்டிக்கபடுவார் என்றால்
நாங்கள்
தண்டிக்கப்பட்டிருக்கிறோம்....?

Monday, December 22, 2008

மண் மேடு

வென்றவனுக்கு
சரித்திரமும்
தலையணை தரும்..

சாய்ந்தவனுக்கு
மண் மேடும்
மலை முகடு....

முயற்ச்சிதவனுக்கு
ஆழியும்
கடந்துவிடும் தூரமமே....

நீல வானமும்
தொட்டுவிடும்
உயரமே.....

சுட்டெரிக்கும்
சூரியனும்
தொட்டுவிடும்
பனிக்கட்டியே.........


கலங்கச்செய்யும்
கவலைகளை
களையச் செய்து
தோல்வியின்
துணைக்கொண்டு
துணிந்துவிடுத்
தோழா
இனி
உலகம்
உன்
காலடியில்.....

Friday, December 5, 2008

விட்டில் பூச்சி நான்

முகில் மூடிய
மதியின்
முகம் காண
முயல்கிறேன்........
நீ
வெட்கப்பட்டு
கைகளால்
மூடிகொண்ட
உன்
முகத்தை
விரல்களால்
விலக்கி
உன்
நாணம்
காண துடிக்கிறேன்......
எனை
ஏமாற்றாதே
விளக்கொளி
தேடி
ஓடி வரும்
விட்டீல்
பூச்சி நான்.