Monday, June 23, 2008

காதல்

உன்னை
கேள்விகேட்டேன்
பதில் இல்லை.


என்னை
நீ
கேட்டாய்....

பதிலாய்
உன்னைபார்த்தேன்,
விழீகளில்
வலிததும்ப..

என்னை
பார்க்கிறீர்கள்
என்றாய்? - இல்லை

இருவர்
உள்ளங்களிலும்
துளிர்விட்ட பிறகும்!

கண்கள்
காட்டி கொடுத்தப்பின்பும்!

உண்ர்வுகள்
துடிக்கின்ற பொழுதும்!

உன்
செவிகள்
உன்னின்
உள்ளக்குமரல்களை
கேட்கின்ற் போதும்!

ஏனடி
உன்
உதடுகள்
உளர
மறுக்கின்றது.

இதோ!

நான் கூறுகின்றேன்..

கவிஞன்
அந்திவனத்தின் மீது கொண்டது.

கலைஞன்
கலை மீது கொண்டது.

சிற்பி
சிலை மீது கொண்டது.

மழை
மண் மீது கொண்டது.

உடல்
உயிர் மீது கொண்டது.

வண்டு
மலரிடம் கண்டது.

அடி பேதையே
இன்னுமா புரியவில்லை உனக்கு? - இல்லை

எல்லாம்
அறிந்தும் - அந்த
சிவபெருமான் போல் - என்னை
தருமியாக்கி சோதிக்கிறாய?

No comments: